அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...
About Me
இளந்தமிழ்
எழுத்து உலகத்தில் என் போன்ற வளரும் எழுத்தாளர்களை வளர்க்க எவரும் முன் வருவதில்லை என்பது எனது அனுபவப்பூர்வமான கருத்தாகும். அண்ணன் பாலமுருகன் அவர்களால் தூண்டப்பட்டு இன்று எழுத்துலகத்தில் காலடி வைத்துள்ளேன். சமீப காலமாக எனக்கும் இவ்வுலகத்திற்கும் சிறு இடைவெளியை வைத்து நான் ஒதுங்கியிருந்தேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என் போன்றவர்கள் தங்களின் கிறுக்கல்களை மக்களிடம் சேர்க்கச் சிரமம் கொள்கின்றனர். அதனை கருத்தில் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சியை உங்கள் கைகளில் தவழவிடுகிறேன். திருத்திக்கொள்கிறேன்,பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டும் போது. நன்றி